நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழில் சூர்யா, சிவகார்த்திகேயன் ஜோடியாக 2 படங்களில் நடிப்பதுடன், இந்தியில் டெ டெ பியார் டெ படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்கிறார். இப்படம் முடிவடைந்து திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலைதளங்களில் பலரும் கமென்ட் பகிர்ந்துள்ளனர். இது ரகுலை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஆனால் ரகுலால் படத்துக்கு எந்த பிரச்னையும் இல்லை. இதே படத்தில் குணசித்ர நடிகர் அலோக் நாத் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் மீது நடிகை வின்டா நந்தா மீடூ இயக்கம் சார்பாக புகார் கூறினார். தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அப்படத்தை வெளியிடக்கூடாது என்று நெட்டில் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.